கார்த்தி – ஜோதிகா – சத்யராஜ் கூட்டணியில் புதுப்படம் – இன்று முதல் ஷுட்டிங் !

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (12:54 IST)
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோர் நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

கைதிப் படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல்முறையாக கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் நடிக்கும் படத்தினை வையாகாம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தினை மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்க இருக்கிறார்.

த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர் டி ராஜசேகர் மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். ஒரேக் கட்டமாக படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இன்று படப்பிடிப்புத் தொடங்குவதை அடுத்து இப்படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்