கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் என்னை நோக்கி பாயும் தோட்டா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கிக் கொண்டே தனுஷை வைத்து, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடங்கினார் கௌதம். குறுகியகால தயாரிப்பான இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது.
இப்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் மூன்று வாரகால படப்பிடிப்பே மீதமுள்ளது. அதுவும் முடிந்தால் படம் போஸ்ட் புரொடக்ஷனுக்கு தயாராகிவிடும்.