கமல் வீட்டில் தீ விபத்து: பாதுகாத்து வைத்திருந்த பொக்கிஷங்கள் சாம்பல்

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2017 (04:01 IST)
நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்கள் சாம்பலானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன



 


சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் உள்ள மூன்றாவது மாடியில் ஃப்ரிட்ஜ் அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் இருந்த புத்தகங்களில் தீ பற்றி அதனால் ஏற்பட்ட புகை வீடு முழுவதும் சூழ்ந்ததாகவும் இதனை ஆரம்பத்திலேயே அறிந்த அவரது ஊழியர்கள் விரைந்து வந்த தீயை கட்டுப்பட்டுத்தி கமலை வீட்டதாகவும் தெரிகிறாது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: என் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நான் பத்திரமாக இருக்கிறேன், யாருக்கும் பாதிப்பு இல்லை. தீ விபத்தில் இருந்து தப்பிக்க உதவிய எனது ஊழியர்களுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்