’திரெளபதி’ இயக்குனரின் அடுத்த படமும் ‘சர்ச்சை’தான்: இதுதான் டைட்டில்

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (15:09 IST)
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஜி மோகன் இயக்கிய ’திரெளபதி’ திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் நாடக காதலுக்கு எதிரான படம் என்று ஒரு பிரிவினர் கொண்டாட, இன்னொரு பிரிவினரோ இந்த படம் ஜாதி வெறியை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டினார் 
 
மேலும் பாஜக பிரமுகர்களான எச்.ராஜா உள்பட ஒருசிலரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட ஒரு சில அரசியல்வாதிகள் இந்த படத்தை கொண்டாடினார்கள். அதே நேரத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். இருப்பினும் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ரூபாய் 80 லட்சம் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 5 கோடி வசூலை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திரௌபதி பட இயக்குனர் ஜி மோகன் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். அவர் தனது அடுத்த படத்தின் டைட்டில் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: திரெளபதின்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்.. என்று கூறியுள்ளார். 
 
இந்த டுவிட்டில் இருந்து அவருடைய அடுத்த படமும் சர்ச்சைக்குரிய படம் என்பது உறுதியாகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்