மலைவாழ் மக்களின் கதையை சொல்லும் எங்க ஏரியா உள்ளே வராதே

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (15:56 IST)
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் படங்களை இயக்கிய ராஜாமோகன் அடுத்து மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் இயக்குகிறார்.
 
மலைவாழ் மக்களின் சவாலாக இருப்பது வெளியிலிருந்து வரும் நபர்கள். காடுகளை அழிக்கவும், மிருகங்களை வேட்டையாடவும், கனிம வளங்களை திருடவும் வரும் வெளியாள்கள் காரணமாக மலைவாழ் மக்கள் தங்களின் இடங்களை பறிகொடுக்கும் நிலை இந்தியா முழுவதுமே உள்ளது. அதனை இந்தப் படம் தொட்டுச் செல்லும் என தெரிகிறது.
 
நந்திதா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் அன்னக்கொடியில் ஹீரோவாக நடித்த லக்ஷ்மண் நாயகன். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.