பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் - உறுதி செய்த கார்த்திக் சுப்பாராஜ்

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2015 (11:29 IST)
பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமண நிச்சயதார்த்தம் வரும் எட்டாம் தேதி சென்னையில் நடப்பதாக நேற்று செய்தி வெளியானது. அதனை கார்த்திக் சுப்பாராஜ் உறுதி செய்துள்ளார்.


 
 
உறுமீன் படத்தில் இணைந்து நடித்தபோது பாபி சிம்ஹாவுக்கும் ரேஷ்மி மேனனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால், அவர்கள் அதனை மறுத்தனர். இந்நிலையில் அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கயிருப்பதாக செய்தி வெளியானது. இதனை இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
 
கார்த்திக் சுப்பாராஜின் ஜிகிர்தண்டா படத்திற்குப் பிறகே பாபி சிம்ஹாவின் மார்க்கெட் உயர்ந்து, தனி நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.