குற்றப்பரம்பரையை கைவிட்ட பாரதிராஜா

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (12:59 IST)
தனது கனவுப்படம் குற்றப்பரம்பரையை அவசர அவசரமாக தொடங்கிய பாரதிராஜா அதனை தற்காலிகமாக கைவிட்டுள்ளார்.



குற்றப்பரம்பரை படத்தை இயக்குவதே வாழ்நாள் லட்சியம் என்று பாரதிராஜா சொல்லிக் கொண்டிருக்க, பாலாவும் அதேகதையை படமாக்க முயற்சி எடுத்தார். அதிர்ந்து போன பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டு பாலாவை திட்டியதும், பாலா பதிலடி கொடுத்ததும் அறிந்த கதை.

பாலாவுக்கு போட்டியாக அவசர அவசரமாக படத்தை தொடங்கிய பாரதிராஜா அப்படத்தை தற்காலிகமாக கைவிட்டு ஒரு காதல் கதையை படமாக்குகிறார். இயக்குனர் வஸந்தின் மகன் இதில் நாயகனாக நடிக்க உள்ளார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்