சில தினங்களாக கோடம்பாக்கத்தில் இப்படியொரு செய்தி உலவி வருகிறது. தெறியை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார் என்பதே அந்த செய்தி.
கார்த்தியின் கால்ஷீட் டைரி நிரம்பியுள்ள நிலையில் அவர் அட்லியின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது உண்மையா என்ற சந்தேகத்துடன் விசாரித்தால், அத்தனையும் வதந்தி என்கிறது அட்லி வட்டாரம்.
தெறியின் அமர்க்களமான வெற்றியை தனது மனைவியுடன் கொண்டாடி வருகிறார் அட்லி. அவர் இன்னும் அடுத்தப் படம் குறித்து யோசிக்கவில்லை. கார்த்தியை இயக்குகிறார் என்பதெல்லாம் உறுதி செய்யப்படாத வதந்திகள் என்கிறார்கள்.
கார்த்தி மணிரத்னம் இயக்கும் படத்திலும், சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது காஷ்மோரா படப்பிடிப்பில் அவர் பிஸியாக உள்ளார்.