சாணிக் காயிதம் பட ரிலீஸ் அறிவிப்பு… கண்டுகொள்ளாத இயக்குனர்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (09:21 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் படம் உருவாகி ரிலீஸூக்கு தயாராகியுள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து பின்னர் மீண்டும் தொடங்கி முடிந்துள்ளது.

இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால் ஓடிடி வெளியீட்டுக்கு முயற்சி நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தின் பின்னணி இசையமைப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் மே 6 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்போது நேற்று படத்தின் டீசரும் வெளியானது. பரவலான கவனத்தைப் பெற்று வரும் நிலையில் அந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ரிலீஸ் தேதியையோ டீசரையோ பகிரவில்லை. ஆனால் நேற்று அவர் தன்னுடைய முதல் படமான ராக்கி பற்றிய பதிவுகளை பகிர்ந்துள்ளார். இதனால் இப்போது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்