கார்த்திக் சுப்பாராஜின் படத்தில் நடிக்கும் அஞ்சலி

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2015 (09:36 IST)
கார்த்திக் சுப்பாராஜ் அடுத்து இறைவி என்ற படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.
 

 
ஹீரோயின் மையப் படமான இதில் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
 
தற்போது அஞ்சலி தெலுங்குப் படத்தில் பிஸியாக இருக்கிறார். இறைவி படத்தில் அவர் நடிப்பதை இதுவரை அவரோ கார்த்திக் சுப்பாராஜ் தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.