காயமே அது மெய்யடா கடமையை முதலில் செய்யடா

Webdunia
சனி, 2 மே 2015 (09:25 IST)
வாசகர்கள் பயப்பட வேண்டாம். ராய் லட்சுமியின் சின்சியாரிட்டியைதான் கொஞ்சம் ரிதமிக்காக சொல்ல முயற்சித்திருக்கிறோம்.

சவுகார்பேட்டை படத்தில் பேயாக நடித்து வருகிறார் ராய் லட்சுமி. படப்பிடிப்பின் போது ராயின் கணுக்காயலில் காயம்பட்ட விவரத்தை ஏற்கனவே எழுதியிருந்தோம். 
 
இந்த காயம் காரணமாக அவர் சில தினங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லையே.
முருகதாஸின் அகிரா இந்திப் படத்தின் இரண்டாவது ஷெட்யூல்டில் ராய் லட்சுமி நடிக்க வேண்டும். காயத்தை காட்டி படப்பிடிப்பை தட்டிக் கழிக்காமல் காயத்துடனும், வலியுடனும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
 
இப்போது செய்தியின் தலப்பை படித்துப் பாருங்கள், கொஞ்சம் புரியுறாப்ல இருக்கும்.