நடிகர் திலீப் கைது: நடிகை வழக்கில் திடுக்கிடும் திருப்பங்கள்!!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (19:17 IST)
கேரள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.


 
 
கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகையை சிலர் காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தனர். அது தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உட்பட சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். மேலும், திலீப் மற்றும் காவ்யா மாதவனுக்கு எதிராக பல முக்கிய வலுவான ஆதரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாவும் செய்திகள் வெளியானது. இதனால் அவர்கள் இருவரும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது.  
 
அதே நேரத்தில் நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் நடிகர் திலீப் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களும் வெளியானது. 
 
தற்போது சில முக்கிய ஆதாரங்களை முன்வைத்து திலீப்பை போலீசார் கைது செய்துயுள்ளனர். திலீப் கைது சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்