நீங்கள் அந்தக் காட்சியில் நடிக்க மறுத்ததால் டூப் நடிகையை வைத்து எடுக்க வேண்டியதாயிற்று, நான் என்ன செய்ய முடியும் என்று நஸ்ரியாவுக்கு சற்குணம் பதிலளித்துள்ளார். படத்தில் வரும் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் நான் நடிக்கவில்லை, டூப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள், அதனை நீக்காவிட்டால் வழக்கு தொடருவேன் என்று நஸ்ரியா தெரிவித்தார்.
அதேபோல் நடிகர் சங்கத்தில் இயக்குனர் சற்குணம், தயாரிப்பாளர் கதிரேசன் மீது புகார் அளித்தவர் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து சற்குணம், கதிரேசன் இருவர் மீதும் புகார் தந்தார்.
மேலும், குறிப்பிட்ட காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் எனவும் கோரியிருக்கிறார். நஸ்ரியாவின் இந்த துணிச்சலான முடிவு திரையலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெளிப்பிரச்சனையில் கருத்து சொல்லும் திரையுலக கருத்து கண்ணன்களும், கண்ணம்மாக்களும் இதுவரை கப்சிப்பாக இருப்பது ஆச்சரியம்.