சுவிஸ் ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு தகுதி!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (07:41 IST)
கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் காலிறுதிக்கு இந்தியாவின் பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது பாசெல் என்ற நகரில் நடைபெற்று வருகிறது இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இந்த சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பிவி சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்டில் அமெரிக்க வீராங்கனை அரிஸ் வாங் என்பவரை தோற்கடித்தார். இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு முன்னேறினார்
 
அதேபோல் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-10, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் தாமஸ் பிரான்ஸின் ரோக்சலை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
 
மேலும் இந்திய வீரர்கள் சாய் பிரனீத், அஜய் ஜெயராம் ஆகியோரும் அடுத்த சுற்றை எட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,  
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்