இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, இரண்டு பேரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி இறுதி ஆண்டுக்குப் பிறகு புவனேஸ்ரி கல்லுரிக்கு சென்று விட, பிருந்தாவை ஏற்றுமதி நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். ஆனால் அவர்களின் நட்பு தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியில் வந்தவர்கள் வீடு திரும்ப வில்லை. இரண்டு வீட்டாரும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இன்று புவனேஸ்வரியின் தந்தை ராமு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நகர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.