இதனால், மாணவன் பள்ளியிலிருந்து வெளியேறி இருக்கிறான். பின்னர் பிற்பகலில் வழக்கறிஞர்கள் எனக் கூறிக்கொண்டு 3 நபர்கள் ஆசிரியர் பாஸ்கரனைப் பார்க்க வந்துள்ளனர். பாஸ்கரன் வந்ததும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வெளியிலிருந்து ஏறக்குறைய 10க்கும் மேற்பட்டோர், அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் பாஸ்கரனை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பாஸ்கரன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஸ்கர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில், சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த ஆசிரியர் பாஸ்கரன் சுய நினைவிழந்துள்ளார். இதையடுத்து பாஸ்கரனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கோடம்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.