ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு! – காவல்துறை அறிவிப்பு!

வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:20 IST)
அக்டோபர் 2ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பல்வேறு மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், சேலம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக காவல்துறை, அக்டோபர் 2 அன்று எந்த அமைப்பும் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட காவல் தலைமையே முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 2ம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்