தமிழகம், புதுச்சேரி கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ்! – மத்திய அமைச்சர் மகிழ்ச்சி ட்வீட்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (13:38 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கடற்கரைகள் சிறந்த சுற்றுலாதளமாகவும், பொழுதுபோக்காகவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகளில் அழகாகவும், கடல்சார் சூழலை பாதுகாக்கும் விதமாகவும் பராமரிக்கப்படும் கடற்கரைகளுக்கு சர்வதேச அளவிலான நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் கோவளம் கடற்கரை மற்றும் புதுச்சேரியின் ஈடன் கடற்கரைக்கு சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் ”அழகான கடற்கரை மற்றும் கடல்சார் சூழலை பாதுகாப்பதில் இந்தியாவின் உறுதிக்கான மற்றுமொரு அங்கீகாரம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்