பிளஸ் டூ தாண்டாத தமிழக அமைச்சர்கள் 15 பேர்

Webdunia
திங்கள், 30 மே 2016 (08:05 IST)
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில், முதல்வர் ஜெயலலிதாவையும் சேர்த்து, 33 அமைச்சர்களில் 15 பேர் பிளஸ் டூ வகுப்பைக்கூட   தாண்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

 
தமிழக சட்டசபை தேர்தலின் போது, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த, தமிழ்நாடு எலெக்ஷன் வாட்ச் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள், தமிழக அமைச்சர்களின் கல்வி குறித்த விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
 
அதில், தமிழக அமைச்சர்களில் மொத்தம் 33 பேரில், 6 பேர் பட்டப்படிப்பும், 8 பேர் முதுகலை பட்டப்படிப்பும், 4 பேர் தொழிற்கல்வி பட்டப்படிப்பையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
 
மேலும், ஒருவர் 8 வகுப்பு தேர்ச்சி அடைந்துள்ளார். 7 பேர், 10 ஆம் வகுப்பு, 7 பேர் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
 
 
அடுத்த கட்டுரையில்