அடுத்த 4 நாட்களுக்கு கனமழை - வானிலை அப்டேட்!!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (14:03 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
ஆம், சென்னை உட்பட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
குறிப்பாக சென்னையில் இரண்டு நாள்களுக்கு கனமழை தொடருமென்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்