அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்ட மாணவ அமைப்பினர்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (14:12 IST)
சென்னை அண்ணாசலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றியதற்க்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க துணை தூதரகத்தை மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டனர். மாணவர் அமைப்பின் தலைவர் இனியவன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தின் போது அங்கிருந்த ஒருவர் அமெரிக்க தூதரகம் முன் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றவரை பிடித்து கைது செய்து அண்ணாசலை காவல்நிலையத்திற்க்கு கொணடு சென்றனர்.