சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (08:08 IST)
சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தோல் நோய் சிகிச்சைக்காக திருப்பத்தூரை சேர்ந்த ரஞ்சிதம் என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டு இருந்தார் 
 
அவர் நோயால் ஏற்பட்ட வலி காரணமாக மிகுந்த அவதிப்பட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கி ரஞ்சிதம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்