திமுகவில் கருணாஸ் : அதிர்ச்சியில் அதிமுக!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (14:59 IST)
சட்டசபை தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் முக்கலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் திருவாடணை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் முதல்முறையாக சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 
 
அதிமுக ஆதரவான இவர் சட்டசபை வளாகத்தில் திமுக உறுப்பினர்களுடன் கைக்குலுக்கி சகஜமாக பேசியது அதிமுகவினரிடைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பொதுவாக தமிழக அரசியலில் அதிமுகவும், திமுகவும் எதிர் எதிர் துருவங்கள். இந்த இரு கட்சியை சேர்ந்தவர்களும் நேருக்கு நேர் சந்தித்தால் கூட பேசிக்கொள்ளமாட்டார்கள். எதிரியை போல பார்பார்கள்.
 
இந்நிலையில் தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொள்ள இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை புரிந்தார்கள்.
 
அப்போது அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் திமுக உறுப்பினர்களுடன் கைக்குலுக்கி பேசிக்கொண்டிருந்தார். இதனை அதிமுக உறுப்பினர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே சென்றார்கள்.
 
கருணாஸ் திமுக உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகியுள்ளதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்