எங்கள் கட்சினரிடம் மக்கள் ஓட்டுக்கு பணம் கேட்க வேண்டாம்: விஜயகாந்த்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (14:31 IST)
தேமுதிக வேட்பாளர்களிடமும், என்னிடமும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு வசதி இல்லை என்பதால் வாக்களிக்க பணம் கேட்க வேண்டாம் என்று விஜயகாந்த், பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
 

 
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ”ஆளும் கட்சி செய்யும் தவறுகளை வெளிப்படுத்தாமல், ஊடகங்கள் தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்துவதாக கூறினார். 
 
இதைத்தொடர்ந்து, தேமுதிக கட்சி வேட்பாளர்கள் எளிமையானவர்கள் என்று கூறிய விஜயகாந்த், என்னிடமும் எனது கட்சி வேட்பாளர்களிடமும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு வசதி இல்லை என்பதால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க பணம் கேட்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
 
விஜயகாந்த் கூறியது, அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்து வரும் கட்சிகளை போல் எங்கள் கட்சி இல்லை என்று குறிப்பிட்டது போல் இருந்தது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்.....
அடுத்த கட்டுரையில்