வருகிற சட்டசபை தேர்தலில் திமுக 120 தொகுதிகளி வெற்றி பெறும் எனவும் அதிமுக 94 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தமிழ்கத்தில் வருகிற 16-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. யார் வெற்றி பெறுவார் என்று சற்றும் யூகிக்க முடியாத இந்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என பலவேறு கருத்துக்கணிப்புகள் தினமும் வெளிவருகின்றன.
இந்நிலையில் லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையம் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் 42.7 சதவீத ஆதரவுடன் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது.