குப்பைத்தொட்டியில் மான்தோல்: வனத்துறையினர் விசாரணை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (23:08 IST)

சென்னை மந்தைவெளியில் குப்பைத்தொட்டியில் மான்தோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

 


சென்னை மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலையில் தொலைபேசி அலுவலகம் அருகில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அதில் தோல் ஒன்று இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டனர். பலர் செல்போனில் அதனை படம் பிடித்த வாட்ஸ் அப்பில் போட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அபிராமபுரம் காவல்துறையினர் விரைந்து சென்று மான்தோலை பறிமுதல் செய்து, வேளச்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இறைச்சிக்காக மானை வேட்டையாடி தோலை யாரோ குப்பைத் தொட்டியில் வீசி விட்டு தப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
அடுத்த கட்டுரையில்