தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வுமையம்

வியாழன், 24 நவம்பர் 2022 (15:36 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகத்தில்  நிலவுகின்ற வளிமண்ட கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக  அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

வடதமிழகத்தில் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியினால், இன்று  வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்  ஒரு சில இடங்களிலும்,  தென் தமிழகத்தில்  ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும்,    நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளாதாக தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்