ஜனவரி மாதத்திற்குப் பிறகே கூட்டணி குறித்து முடிவு: விஜயகாந்த்

Webdunia
சனி, 7 நவம்பர் 2015 (09:00 IST)
2016 அம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான  கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


 

 
மக்களுக்காக மக்கள் பணி என்ற நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், ஜனவரி மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
 
மக்களை வறுமையில் வைத்திருப்பதே திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று விஜயகாந்த் குற்றம் சாற்றியுள்ளார்.