7ஆம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக ஜெயலலிதா, சசிகலாவுக்கு உத்தரவு

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2014 (16:08 IST)
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் சுதாகரன் இன்று நேரில் ஆஜரானார்.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்  மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  
 
இந்த வழக்கில் இன்று ஜெயலலிதா ஆஜராக விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நேரில் ஆஜராக கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று சுதாகரன் மட்டும் நேரில் ஆஜரானார். 
 
சசிகலா சார்பில் வருகிற திங்கட்கிழமை நேரில் ஆஜராவதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.உடல்நிலை சரியில்லை என்பதால் சசிகலா ஆஜராகவில்லை என சசிகலாவின் வழக்குரைஞர் தெரிவித்தை ஏற்க மறுத்த நீதிபதி குன்கா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கண்டிப்பாக வரும் 7ம் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.