மின்வெட்டை பற்றி கவலைப்படாதவர் ஜெயலலிதா - குஷ்பு கடும் தாக்கு

Webdunia
ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (12:55 IST)
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையை அடுத்து உள்ள பாளையத்தில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அப்போது அவர் மின்வெட்டைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் ஜெயலலிதா என்று பேசினார்.
Kushboo election campaign
தமிழகத்தில் தினமும் 10 மணி நேர மின்வெட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் அவதிப்படுகின்றனர்.
 
இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரசாரத்துக்காக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகாயத்தில் பறக்கிறார். தமிழக மக்கள் மின்வெட்டால் தொடர்ந்து துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.
 
எனவே அ.தி.மு.க.வை அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மக்கள் எழுச்சியை பார்க்கும் போது அ.தி.மு.க.வை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதியாகிவிட்டது.
 
இவ்வாறு குஷ்பு பேசினார்.