20ஆ‌ம் தே‌தி மெரினா‌வி‌ல் திரள நெடுமாற‌ன் அழை‌ப்பு

வெள்ளி, 18 மே 2012 (11:45 IST)
செ‌ன்னை மெ‌ரினா கட‌ற்கரை‌யி‌ல் வரு‌ம் 20ஆ‌ம் தேதி நட‌க்க ‌உ‌ள்ள வீரவணக்க நிகழ்ச்சியில் த‌மிழ‌ர்க‌ள் அனைவரு‌ம் பங்கேற்பீர் எ‌ன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் விடுத்துள்ள அறிக்கையில், முள்ளிவாய்க்கால் மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மே 17 இயக்கத்தினர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் இவ்வாண்டு மே 20ஆ‌ம் தேதியன்று சென்னை கடற்கரையில் மாலை 6 மணிக்கு முள்ளிவாய்க்கால் மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழர்களும் கலந்து கொள்ளுமாறு நெடுமாற‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்