சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் வரும் 7ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று கூடியதும் எதிர்க்கட்சிகள் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்த பிரச்சனையை எழுப்பியதால் அபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை தள்ளிவைக்கபட்டது.
இதைத் தொடர்ந்து 12 மணிக்கு அவை கூடிய போது மீண்டும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாள் முழுக்க அவையை சபாநாயகர் தள்ளிவைத்தார்.
மாநிலங்களவையிலும், அமளி ஏற்பட்டதால் 7ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இரு அவைகளிலும் 9வது நாளாக இன்று எந்த ஒரு அலுவலும் நடக்கவில்லை.
வரும் 5, 6 ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை என்பதால் 7ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.