பங்கு சந்தை முன்னேற்றம் தொடரும்

கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த இந்திய பங்கு சந்தையில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும் என்று பங்கு வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஒரு வார காலத்தில் மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பங்கு சந்தைகளின் குறியீடு 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. சர்வ தேச பங்கு சந்தைகளில் நிலவும் முன்னேற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தைகளிலும் அன்னிய நிறுவன முதலீடுகளால் ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்