உருளைக்கிழங்கு கமிஷன் குறைப்பு!

புதன், 1 அக்டோபர் 2008 (17:29 IST)
உதகை: மேட்டுப்பாளையத்தில் இயங்கும் உருளைக்கிழங்கு கமிஷன் மண்டியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 4 விழுக்காடு கமிஷன் தொகை மட்டுமே வசூலிக்கப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீலகிரி உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு பயிர் சாகுபடிக்காக செய்யும் செலவு மற்ற மாவட்டங்களைவிட கூடுதலாக உள்ளது.

மேலும் விவசாயிகளின் விளை பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் போது, உருளைக்கிழங்கிற்கு 7 விழுக்காடு கமிஷன் வசூலிக்கப்பட்டு வந்தது.

நீலகிரி விவசாயிகளின் சாகுபடி செலவு, கமிஷன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அக்டோபர் 1ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இயங்கும் என்.சி.எம்.எஸ் நிர்வாகம் உருளைக்கிழங்கிற்கு 4 விழுக்காடு கமிஷன் மட்டும் வசூலிக்குமென கூட்டுறவுத்துறை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் உதகையிலுள்ள என்.சி.எம்.எஸ் வளாகத்தில் தினசரி விற்பனை செய்யும் காய்கறிகளுக்கும் கமிஷன் தொகையாக 3 விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் இந்த சலுகையினை பெற்று பயனடைய வேண்டும். மேட்டுப்பாளையம் என்.ி.எம்.எஸ் சந்தையில் 4 விழுக்காடு கமிஷனை மட்டுமே செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்