டெல்லியில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பாலியல் பாலத்காரம் - 2 பேரும் கவலைக்கிடம்

Webdunia
சனி, 17 அக்டோபர் 2015 (13:44 IST)
டெல்லியில் இரண்டு குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். தற்போது 2 சிறுமிகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு ஒடும் பேருந்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்நிலையில், நேற்று இரவு மேற்கு டெல்லியின் நங்கோலி பகுதியில், வசித்து வந்து இரண்டரை வயது சிறுமியை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேர் பாலியல் பாலத்காரம் செய்துள்ளனர். தற்போது அப்பகுதி அரசு மருத்துவமனையில்  உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த குழந்தை சிசிச்சைப் பெற்று வருகிறார்.
 
இதனை தொடர்ந்து, கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் 5 வயது சிறுமியை நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரர் கடத்திச்சென்று, தனது நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலையில் அப்பகுதி பூங்காவில் அச்சிறுமி மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட குற்றவாளிகள் இதுவரை டெல்லி போலீஸார் கைது செய்யப்படவில்லை. மேலும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.