உத்தரபிரதேசத்தில் லஞ்சம் வாங்கிய பணத்தை பிரித்து கொள்ள காவல் துறையினர் நடுரோட்டில் சண்டை போட்டுக்கொண்டு கட்டி புரளும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
உத்திரபிரசேத மாநிலம் ல்க்னோவில் உள்ள சாலையில் லஞ்ச பணத்தை பிரித்துக் கொள்வதில் காவல் துறையினர் இடையே சண்டை ஏற்பட்டு நான்கு பேருர் அடித்துக்கொண்டு கட்டி புரண்டு உள்ளனர்.
சாலையில் வாகன ஓட்டிகளிடம் வசூலித்த லஞ்ச பணத்தை இரு காவல் துறையினர் நடுரேட்டில் பொது மக்கள் பார்ப்பதைக் கூட பொருட்படுத்தாமல் ஒருவரை ஒருவர் சரமாரியாக கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதை அருகில் இருந்த மற்ற இரு காவல் துறையினர் தடுக்க முயன்றனர். சம்பவ இடத்திலிருந்த பொது மக்கள் அவர்களின் சண்டை காட்சியை வீடியோ பதிவு செய்து சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த இரு காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.