பீகாரில் பள்ளி தலைமை ஆசிரியரை கொடூரமாக அடித்துக் கொன்ற பொதுமக்கள்

Webdunia
திங்கள், 29 ஜூன் 2015 (16:41 IST)
பீகாரில் பள்ளி மாணவர்கள் இருவர் குளத்தில் இறந்து கிடந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது
 
பீகார் மாநிலம் மிர்பூரில் வி.பி.எஸ். என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் விடுதியில் தங்கி பயின்ற இரு மாணவர்கள் காணாமல்போன நிலையில், அருகே உள்ள நீர் நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
 
ஆசிரியர் தாக்கியதால்தான் மாணர்வகள் உயிரிழந்தனர் என்று கூறிய உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் பள்ளிக்கு சென்று அங்கிருந்த நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் பள்ளி வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் தேவேந்திர பிரசாத் சிங்கை வெளியே இழுத்து வந்து பெரிய மர தடிகள் மற்றும் கற்களால் கொடூரமாக தாக்கினர். தகவலறித்து வந்த காவல்துறையினர் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த பள்ளி முதல்வரை பாட்னாவில் உள்ள மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.