பயணிகள் பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது: குழந்தை உட்பட 5 பேர் பலி

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2014 (11:46 IST)
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது உயர் அழுத்த மின்சார கம்பி உரசியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
 
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்கார் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து உயர் அழுத்த மின்சார கம்பி மீது உரசியதில், பேருந்து மீது மின்சாரம் பாய்ந்து பேருந்து தீப்பற்றி எரிந்தது.
 
இந்த விபத்தில், ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட 5 பேர் பலியாயினர். பேருந்தில் பயணம் செய்த பிற பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர்.
 
இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் சோகத்தில மூழ்கியுள்ளது.