இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! – அவசரமாக தரையிறக்கம்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:07 IST)
பெங்களூருக்கு வந்துக் கொண்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இருந்து கர்நாடகாவின் பெங்களூர் விமான நிலையத்திற்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று 175 பயணிகளோடு புறப்பட்டது.

விமானம் பெங்களூரை அடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று இருந்ததை விமான பணிப்பெண் கண்டெடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விமானிக்கு தகவல் தெரிவிக்க, விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.

எனினும் பாதுகாப்பு கருதி வேறொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்