ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் கட்டப்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் இடித்து தள்ளப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் அரசியல் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பழிவாங்கும் அரசியல் என குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திராவில், சந்திரபாபு அடக்குமுறையை கையிலெடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு, இந்த ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற வன்முறை செய்தியை இந்த சம்பவத்தின் மூலம் தந்துள்ளார் என்றும் இந்த அச்சுறுத்தல்கள், வன்முறைகளுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அடிபணியாது. பின்வாங்கவும் செய்யாது என்றும் ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.