ஒரே நாளில் 3,998 பேர் கொரோனாவால் பலி! – அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (09:47 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் ஒருநாள் இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 42,015 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,12,16,337 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,998 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,18,480 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,03,90,687 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,07,170 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்