90 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (11:11 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளித்த நிலையில் அதிகரித்த கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86,961 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 54,87,581 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,130 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 87,882 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 43,96,399 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 10,03,299 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்