ரகசியமாக வெளிநாட்டுக்கு பறந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2015 (04:46 IST)
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரென வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
 
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது தனிப்பட்ட பயணமாகத் திடீரென வெளிநாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றுள்ளார்.
 
அவர் எந்த நாட்டுக்கு சென்றார் என்பதும், எப்போது இந்தியா திரும்பி வருவார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ஒரு வார காலத்திற்குச் சோனியா, வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.