நாடெங்கும் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் பஞ்சாபில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது, காங்கிரஸ் மற்றும் பாஜக அதிகாரத்திற்காக பேராசைப்படுவதாக தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, காங்கிரஸ் மற்றும் பாஜக நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாகவும், அக்கட்சிகள் அதிகாரதிற்காக பேராசைப்படுவதாகவும், ஆம் ஆத்மி கட்சி மட்டுமே நாட்டில் உள்ள மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், டெல்லி முதலமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்ததை குறித்து விமர்சிப்பவர்களுக்கு தியாகம் என்றால் என்னவென்று தெரியாது என குறிப்பிட்ட அவர் போதை பொருட்கள் கரையானை போல இளைஞர்களின் வாழ்க்கையை கரைத்துவிட்டதாகவும், இதற்கு பஞ்சாப் அரசும், அமைச்சர்களும் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.