தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது ரசிகரை திட்டும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.
நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் சிரஞ்சீவி, தன் மகன் ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கும் புரூஸ்லி திரைப்படத்தின் ஆடியோ விழாவில் கலந்துகொண்டு திரும்பிய போது, ரசிகர்கள் அவரை அருகில் பார்க்க முண்டியடித்தனர்.
இதனால் கோபப்பட்ட சிரஞ்சீவி “ எத்தனை முறை சொல்வது. ஒவ்வோருமுறையும் இதுபோலவே செய்கிறீர்கள்” என்று கோபப்பட்டார். மேலும் “முட்டாள்” என்ற வார்த்தையை உதிர்த்து விட்டு தன்னுடைய காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
இந்த வீடியோ ஆந்திராவில், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.