ஐபிஎல் தான் போச்சு… ஆஸி தொடரையாவது புடிக்கணும் – கோலி ரெடி!

சனி, 7 நவம்பர் 2020 (18:33 IST)
ஐபிஎல் தொடரின் தோல்விக்குப் பிறகு கோலி அடுத்து நடக்க இருக்கும் ஆஸி தொடருக்கு தயாராக ஆரம்பித்து விட்டார்.

ஐபிஎல் தொடரில் கோலியின் ஆர் சிபி அணி நேற்று சன் ரைஸர்ஸ் ஹைதராபாத்திடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து இம்மாத இறுதியில் தொடங்க உள்ள ஆஸி தொடருக்கு தயாராகி உள்ளார் கோலி. ஐபிஎல் தொடர் முடிந்தபின் துபாயிலிருந்து 12-ம் தேதி புறப்படும் 32 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள், துபாயில் இருந்தபடியே ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இந்நிலையில் அணியின் கேப்டன் கோலி ஆஸி தொடருக்கான பயோ பபிளில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்