ஐபிஎல் போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு.. இருப்பினும் சிஎஸ்கேவில் தொடர்வார் என அறிவிப்பு!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:15 IST)
ஐபிஎல் போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு பெற்று விட்டதாகவும் இருப்பினும் அவர் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் பிராவோ. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவரை விடுவிக்க மனமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது
 
இதனை அடுத்து வரும் ஆண்டு முதல் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணி புரிவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்