மூன்றாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

புதன், 30 நவம்பர் 2022 (07:30 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சற்று முன் வரை இந்திய அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளன. ஏற்கனவே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்