தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணியினரை ஊக்குவிக்கும் விதமாக பிசிசிஐ கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு விலையுயர்ந்த வைர மோதிரத்தைப் பரிசாக அளித்துள்ளது.