ரன்பீர் கபூர் நடிக்க விரும்பும் வேடம் எது தெரியுமா?

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2015 (12:53 IST)
யாருக்கு எது விதிக்கப்படவில்லையோ, அதுதான் அவர்களின் ஆசையாக, விருப்பமாக இருக்கும். ரன்பீர் கபூரின் ஆசையை கேட்டால் நீங்களும் ஆம் என்பீர்கள்.
அறிமுகமானதிலிருந்து ஹீரோவாக நடித்து வருகிறார் ரன்பீர். அவரை ஹீரோவாக வைத்து படம் செய்ய இன்றைய தேதியில் சுமார் 25 தயாரிப்பாளர்களாவது இருப்பார்கள். அவரும் நிற்க நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். ரன்பீரின் ஆசை என்ன தெரியுமா?
 
வில்லனாக நடிக்க வேண்டும்.
 
அறிமுகமான புதிதிலேயே இந்த ஆசையை அவர் வெளியிட்டார். இப்போதும் வில்லன் வேடம்தான் அவரது ஆதர்ஷமாக உள்ளது. ஆனால், சாதாரண வில்லனில்லை. பணத்தில் புரளும் அமர்க்களமான வில்லன். கடைசியில் வில்லன் சாக வேண்டும். தனது கனவு வேடத்துக்கு ப்ளூபிரிண்ட் போட்டுத் தந்தும் யாரும் ரன்பீருக்கு செவி சாய்க்காமல் இருக்கிறார்கள்.
 
ம்... நாயகனுக்கு வில்லன் ஆசை, வில்லன்களுக்கு நாயகன் ஆசை.